பாலர் பள்ளி

மரின் பரேட் குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள், குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிச் சூழலால் பாலர் பள்ளிக் கல்வியை மேற்கொள்ள முடியாமல் போவதை முறியடிக்க, அவர்களின் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று மரின் பரேட் தொகுதிக்கு உட்பட்ட ஜூ சியாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
தங்களின் பிள்ளைகள் சரிவர பாலர் பள்ளி வகுப்புகளுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதில் குறைந்த வருமானக் குடும்பங்கள் சவால்களை எதிர்நோக்குகின்றன.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாலர் பள்ளிகளில் சேர கூடுதல் ஆதரவு வழங்க, பள்ளிக் கட்டணத்தில் வரம்பு கொண்டு வரப்பட உள்ளது.
புவாங்கோக் வட்டார பாலர் பள்ளி ஒன்றில் 3 வயதுச் சிறுவன் ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ‘இசிடிஏ’ எனப்படும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
இரு புதிய பாலர் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கூடுதல் தாய்மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படும்.